ஒரு வழியாக தேர்தல் நாள் பக்கமா வந்துடுச்சி. நம்ம ஊருக்கு புதுசு புதுசா யார் யாரோ வராங்க.. எங்க பார்த்தாலும் நம்மள பார்த்து கை எடுத்து கும்புடுரங்க... இதுவாச்சும் பரவ இல்ல்லேங்க.. வேற ஊருக்கு போன அந்த ஊர்ல கூட நமக்கு என்ன மரியாதை!!! எப்பவும் இதே மாதிரி எலெக்சன் நடந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்... சரி விஷயத்துக்கு வருவோம்... நம்ம ஓட்ட நாம போடாம விட்ட களவாணி பசங்க போட்டுட்டு போய்டுவானுங்க... அதனால நாம எங்க இருந்தாலும் ஊருக்கு பொய் ஓட்ட போட்டுட்டு வந்தரனும்.. கவலை படாதீங்க.. டிக்கெட் இல்லைன்னு பீலிங்க்ஸ் ஆ? சும்மா ஒரு போன் போட்டு நம்ம ஏரியா பசங்க காதுல டிக்கெட் இல்ல மச்சான் அதான் வர முடியலனு சும்மா சொல்லுங்க.. அப்புறம் பாருங்க, டிக்கெட் வீடு தேடி வரும் (மறந்திராம காச குடுத்துடுங்க பாஸ்....அவங்க ஓடி ஆடி வேலை செய்யறதுக்கே காசு ஒழுங்கா கிடைக்காது).
அப்புறம் காச வாங்கீட்டு வோட்டு போட்ராதீங்க.. அது தான் இருகிறதுலியே பெரிய தப்புன்னு சொல்றாங்க... (அவங்க MP ஆகி தப்பு பண்றதுக்கு நாம விதை போட்ட மாதிரி இருக்கும்.. இது நமக்கு தேவையா? )
அதே மாதிரி, உங்களுக்கு எல்லாருக்கும் 49'o' பற்றி தெரியும் தான? இல்லேன்னா இந்த சுட்டிய சும்மா ஒரு கிளிக் பண்ணுங்க...
http://en.wikipedia.org/wiki/49-ஒ
நன்றி,
செந்தில்.
Friday, May 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment